Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மகளிர் இலவசமாக நகரப் பேருந்தில் பயணம் செய்ய அரசாணை வெளியீடு.

 




ஆணை :  GO NO - 19 , Date : 07.05.2021

1. 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான மாண்புமிகு முதலமைச்சரின் தேர்தல் அறிக்கையில் , ' தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் நகரப்பேருந்து ( Towr bus ) ] மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும் ' என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.


2. 2011 - ஆம் ஆண்டின் மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கட் தொகையில் பெண்கள் 49.80 சதவீதமாக உள்ளனர் . ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மகளிரின் பங்களிப்பு இன்றியமையாததாகும் . தற்போதைய மாறிவரும் சமூக , பொருளாதார சூழ்நிலையில் மகளிர் உயர்கல்வி பெறுவதற்கும் , குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டு பணிகளுக்குச் செல்வதற்கும் , சுய தொழில் புரிவதற்கும் போக்குவரத்துத் தேவை இன்றியமையாதது ஆகும்.


3. தமிழ்நாட்டில் , பணிபுரியும் ஆண்களின் விகிதத்தை கணக்கில் கொள்ளுப்பாக பணிபுரியும் பெண்களின் விகிதம் பெருமளவு குறைவாகவே உள்ளது . 2011 - ஆம் * மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி , பணிகளில் பெண்களின் பங்களிப்பு Participation Rate ) 31.8 சதவீதமாகவும் ஆண்களின் பங்களிப்பு 59.3 சதபால கணக்கிடப்பட்டுள்ளது . பொருளாதார வளர்ச்சிக்கு மகளிரும் சிறப்பான பங்களிப்பினை இயலும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பணிகளில் மகளிரின் பங்களிப்பு விக்கத் உயர்த்தவேண்டியது அவசியமாகிறது . உயர்கல்வி கற்பதற்காகவும் , பணி பக்கம் பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு பாதுகாப்பான பயணங்களை அமைத்துக் கொட்டிய பொதுப் போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும் , மேற்கூறிய சமூகப் பொருளாதா தேவைகளுக்கு உகந்ததாக அமையும்.


 4 . அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நாரப்பேருந்துக வாயிலாக ஆண்டுடொன்றுக்கு சுமார் ரூ .3,000 கோடி அளவிற்கு வருவாய் பட்டப்படுவதாகவும் , all புரியும் மகளிர் / உயர் கல்வி பயிலும் மாணவியர் சுமார் 40 சதவீதம் நகரப்பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதனால் , நகரப் பேருந்துகளில் இலவம ப போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் வழங்குவதன் மூலம் அரசு ரூ .1,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என கருதப்படுகிறது. 


5 மேற்கண்ட சூழ்நிலையில் , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்ட நகரப் பேருந்துகளில் ( white board ) , பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மானாவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும் , பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.


6. மேலும் , இதன் மூலம் ஆண்டொன்றிற்கு , அரசு போக்குவாத்துக் கழகங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள சுமார் ரூ .1,200 கோடி இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு , இழப்புத் தொகையினை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக வழங்கவும் அரசு ஆணையிடுகிறது.


7. இவ்வானை நிதித்துறையின் இசைவுடன் அதன் அ.சா.எண் .21431 / நிதி ( சங y2021 , நாள் , 07.05.2021 - ன்படி வெளியிடப்படுகிறது

Reactions

Post a Comment

0 Comments