*ஓராண்டாக வேலையின்றி உள்ள பள்ளிஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக்குறைத்து, கரோனா முன்களப்பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றுசமூக வலைதளங்களில் கருத்துகள் பரவும்நிலையில்,'
பள்ளிக் கல்வித்துறை ஏதேனும் திட்டம்வைத்துள்ளதா?* என்ற கேள்விக்கு, அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பதில்அளித்தார்.
📌மணப்பாறை அரசு மருத்துவமனை, அரியமலங்கலம் குப்பைக் கிடங்கு, சத்திரம்பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிஆகியவற்றைப் பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, இன்று (மே 20) நேரில்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
📌சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆய்வுசெய்த பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழிகூறுகையில், "சத்திரம் பேருந்து நிலையம்விரிவாக்கப் பணிகள் 2 கட்டங்களாகநடைபெற்று வருகின்றன. முதல் கட்டப்பணிகள் ஜூன் மாத இறுதியில்நிறைவடையும் என்றும், 2-ம் கட்டப் பணிகள் 3 மாதங்களிலும் நிறைவடையும் என்றும்அதிகாரிகள் கூறியுள்ளனர்.
📌பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தைஆணையராக மாற்றியது
தொடர்பாக, பல்வேறு தரப்பில் இருந்தும்வரப்பெற்ற கருத்துகளை முதல்வர் பரிசீலித்துஉரிய முடிவை அறிவிப்பார்.
📌கரோனா தொற்று குறைந்த பிறகே, பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்துஆலோசனை நடத்தப்படும்" என்றார்.
📌ஓராண்டாக வேலையின்றி உள்ளஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக்குறைத்து, கரோனா முன்களப்பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றுகருத்துகள் பரவி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறைக்கு ஏதேனும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு, "இது தொடர்பாக நானும்சமூக வலைதளத்தில் பார்த்தேன். இதுகுறித்து, முதல்வருடன் ஆலோசித்து, அவர் கூறும்ஆலோசனையின்படி அறிவிக்கப்படும்" என்றார்.
📌அரியமங்கலம் குப்பைக் கிடங்கில்செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, "அரியமங்கலம் குப்பைக்
கிடங்கு பிரச்சினை தொடர்பாக,சட்டப்பேரவையில் பல முறை பேசியுள்ளேன்.அரியமங்கலம் குப்பைக் கிடங்குபிரச்சினைக்கு ஓராண்டுக்குள் தீர்வுகாணப்படும்" என்றார்.
📌முன்னதாக, மணப்பாறை அரசுமருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு,செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேர்தல்முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை வரைகிடைத்த நாட்களை, கரோனா பரவலைத்தடுக்க முந்தைய காபந்து அரசு சரியாகப்பயன்படுத்தத் தவறிவிட்டது. ஆனால்,
திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூடஆகவில்லை. கரோனா பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தொலைநோக்குப்பார்வையுடன் தீவிரமாகக் களப் பணியாற்றிவருகிறது. நகர்ப்புறங்களில்நடத்தப்படுவதுபோல், கிராமப்புறப்பகுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்துவதுகுறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனைநடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிதெரிவித்தார்.
📌ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, கரூர் எம்.பி. எஸ்.ஜோதிமணி, எம்எல்ஏக்கள்மணப்பாறை பி.அப்துல்சமது, திருச்சி கிழக்குஎஸ்.இனிகோ இருதயராஜ், மாநகராட்சிஆணையர் சு.சிவசுப்பிரமணியன்உள்ளிட்டோர் உடனிருந்தனர்
0 Comments