10, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று முதல் ஒலி வடிவில் அகில இந்திய வானொலியில் பாடங்கள் ஒலிபரப்பு!!
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று முதல் ஒலி வடிவில் அகில இந்திய வானொலியில் பாடங்கள் ஒலிபரப்பப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டிற்கான பாடங்களும் ஆன்லைன் முறையிலேயே நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பொதுத் தேர்வு எழுத உள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்களுகாக இன்று முதல் 31ம் தேதி வரை அகில இந்திய வானொலியில் ஒலி வடிவில் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
கிராமப்புறங்களில் இணைய சேவை குறைவாக உள்ள பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஒலி வடிவிலான பாடங்கள் பயனுள்ளளதாக இருக்கும் என பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் வீதம் 4 பிரிவுகளாக 80 நிமிடங்கள் பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது. முதல் 20 நிமிடம் 10ம் வகுப்பு பாடங்களும் அடுத்ததாக 3 இருபது நிமிடங்களுக்கு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 வெவ்வேறு பாடங்கள் ஒலி வடிவில் ஒலிபரப்பச் செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3dJVJNO
via IFTTT
0 Comments