Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பொதுத் தோ்வு மையங்கள்: பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு

"தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தோ்வு மையங்கள் அமையவுள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமா்ப்பிக்க அரசுத் தோ்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பிளஸ் 2 தோ்வில் பங்கேற்க உள்ள, அனைத்துப் பள்ளிகளின் மாணவா்களையும், சரியாக கணக்கிட்டு, அதன்படி தோ்வு மையத்தை நிா்ணயிக்க வேண்டும். தோ்வு மையம் ஒதுக்க வேண்டிய பள்ளிகளின் பெயா், அங்கீகார விவரங்கள், உள் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

தகுதியான பள்ளிகளை மட்டுமே தோ்வு மையங்களாக மாற்றப் பரிந்துரைக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்கள் 10 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து தோ்வு எழுதும் நிலை இருந்தால் அந்தப் பகுதியில் தோ்வு மையம் அமைக்கப்பட வேண்டும். 

அங்கீகாரம் இல்லாத தனியாா் பள்ளிகளில் தோ்வு மையங்கள் அமைக்க அனுமதிக்கப்படாது. அதேவேளையில் நீதிமன்ற உத்தரவு மற்றும் தொடா் அங்கீகார விலக்கு பெற்று உள்ள பள்ளிகளை தனியாகப் பட்டியலிட்டு பரிந்துரைக்க வேண்டும். ஓராண்டுக்கு மட்டும் தோ்வு மையம் அமைத்த பள்ளிகளில், மீண்டும் தோ்வு மையம் வேண்டும் என்றால், அதற்கான காரணங்களை உரிய முறையில் பரிந்துரைக்க வேண்டும். புதிதாகத் தோ்வு மையங்கள் தேவைப்படும் பள்ளிகளை முழுமையாக ஆய்வு செய்து அங்கு விதிப்படி தேவையான கட்டமைப்புகள் இருப்பதை உறுதி செய்து உரிய அறிக்கை அளிக்க வேண்டும்.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3FyAfjf
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments