Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Breaking : DEO மற்றும் அதனையொத்த பணி நிலையில் உள்ள அலுவலர்களுக்கு 12.10.2021 -மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் வெளியீடு

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பிற்பகல் 5.00 மணியளவில்  12 .10.2021 அன்று கலந்தாய்வு கீழ்காணும் நெறிமுறைகளின்படி நடைபெறும் எனத் தல் விக்கப்படுகிறது.


* மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாளில் ( 1210.2021 அன்று ) மாவட்டக் கல்வி அனைத்து பணியிடங்களும் காலிப் அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடமாக ( Zero Vacancy ) கருதப்படும் . 


* மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது சொந்த வருவாய் மாவட்டத்திற்கு மாறுதல் கோர இயலாது.


* DPL வளாகத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் நிலையில் உள்ள பணியிடங்கள் தலைமையிடமாகக் கருதப்படும்.சென்னை மாவட்டத்தை  சேர்ந்தவர்களும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர் . 


* மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மாநில முன்னுரிமைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.


* தற்போது மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் இரண்டாண்டுகளுக்கு மேக் பணிபுரியும் அலுவலர்கள் அதே பணியிடத்திற்கு மாறுதல் பெற இயலாது.


* கலந்தாய்யில் மாவட்டக் கல்வி அலுவணி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் இரண்டாண்டுகளுக்குள் பணிபுறியும் அலுவலர்கள் , மாறுதல் அன்னாரது முன்னுரிமையின் போது , அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகம் காலியாக இருப்பின் , அதே பணியிடத்தினை தெரிவு செய்ய அனுமதிக்கப்படுவர் எனினும் அப்பணியிடம் சொந்த மாவட்டமாக இருப்பின் அப்பணியிடத்தை தேர்வு செய்ய இயாது.


* உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாறுதல் கோரும் உத்தேச 15 பணியிடங்கள் சார்ந்த விவரங்களை உரிய முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக அளிக்க வேண்டும் எனவும் முன்னுரிமையின்படி கோரும் பணியிட இப்பட்டியலிலிருந்து அவர்கள் அவர்களுக்கு மாறுதல் வழங்கப்படும் எனவும் தெரிமிக்கப்படுகிறது.








பள்ளி கல்வித்துறையில் பூஜ்ஜியக் கலந்தாய்வு என்றால் என்ன?*
Ⓜ️Ⓜ️Ⓜ️Ⓜ️Ⓜ️Ⓜ️
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மட்டும் புதியதாக பூஜ்ஜியக் கலந்தாய்வு என்ற நிகழ்வு அரங்கேர உள்ளது. அப்படியானால் பூஜ்ஜியக் கலந்தாய்வு எப்படி நடக்கும் என்பது பற்றி ஒரு பார்வை.

முதலில் அனைத்து பணியிடங்களும் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும். பின்னர் EMIS மூலமாக பணியிட வாரியாக பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்படும். இணைய வழி மூலம் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு நாளன்று கலந்தாய்விற்கு முன்னர் பணிமூப்பு பட்டியல் வெளியிடப்படும்.   பணிமூப்பு பட்டியலின் படி கலந்தாய்விற்கு நபர்கள் அழைக்கப்படுவார்கள்.

 அப்பொழுது அவர்களுக்கு காலிப்பணியிடங்கள் திரையில் தோன்றும். அதில்  தற்பொழுது அவர்கள் பணிபுரியும் இடம் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலாத வகையில் (disable) மறைக்கப்பட்டிருக்கும். அவர்கள் விரும்பும் இடத்தை தேர்ந்தெடுக்கலாம். கலந்தாய்விற்கு முன்னர் கலந்தாய்வு விதிகள் வெளியிடப்படும். அதில் ஊனமுற்றோர், முன்னாள் இராணுவத்தினர், இராணுவத்தில் பணிபுரிபுவர்களின் மனைவி, புற்றுநோய்,இதயநோய் போன்ற மிகவும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்படலாம். ஒவ்வொரு பணியிடங்களும் மாறுதல் கலந்தாய்வு நிரைவடைந்தவுடன் மீதமுள்ள  காலிப்பணியிடங்களுக்கு கீழ் நிலைப் பதவியிலிருந்து பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும். 

உதாரணமாக மாவட்டக் கல்வி அலுவலர் கலந்தாய்வு முடிந்தவுடன் அந்த பணியிடத்திற்கான பதவி உயர்வானது மேனிலை / உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் வழங்கப்படும். இது முடிந்தவுடன் தலைமைஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அனைத்து தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலிப் பணியிடமாக அறிவிக்கப்பட்டு விதிகளின் படி பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் படி கலந்தாய்விற்கு அழைக்கபடுவர்.  பின்னர் முதுகலை ஆசிரியர் பதவியிலிருந்து தலைமைஆசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும். இதே போல் அனைத்து பணியிடங்களுக்கும் பூஜ்ஜிய  கலந்தாய்வு நடைபெறும்.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/2YPtU2i
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments