9ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஆல் பாஸ் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல் காரணாக, 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஆல் பாஸ் செய்ய, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கடந்த செப்டம்பர் மாதம் முதல், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் நடுநிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் வெளியான அறிவிப்பில், வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல் பள்ளிகள் தினசரி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே கற்றல், கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்வுகளை முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கடந்த செப்டம்பர் மாதம் முதல், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் நடுநிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் வெளியான அறிவிப்பில், வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல் பள்ளிகள் தினசரி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே கற்றல், கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்வுகளை முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3JxINc9
via IFTTT
0 Comments