தேனி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் எட்டாம் வகுப்பினை உற்று நோக்கி அதனுடைய விபரங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் ஆய்வாளர்கள் பள்ளிகளை பார்வையிட்டு நிரப்ப வேண்டிய படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கும், உற்று நோக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் இந்த படிவம் உங்களுக்கு பயன்படும்.
ஒவ்வொரு குழுவும் நவம்பர் மாதம் 7-ம் தேதியில் இருந்து தொடர்ந்து பத்து நாட்களாக பள்ளி வேலை நாட்களில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாள் வீதம் சென்று அங்குள்ள ஆசிரியர்களிடம் கலந்துரையாடி தரவுகளை சேகரிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 பள்ளிகள் வீதம் 5 மாவட்டங்களில் 100 பள்ளிகள் பார்வையிடப்படும்.
from கல்வி அமுது https://ift.tt/juUWO5n
via IFTTT
0 Comments