
சென்னை: 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம்வரை நடைபெறுவது வழக்கம். இதில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவத் தேர்வாகவும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வாகவும் நடத்தப்படும். இந்நிலையில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு 2023-ம்ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
இந்த அட்டவணையின்படி, 2023-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதிவரை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். பிளஸ் 1 மாணவர்களுக்கு 2023-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17ம் தேதியும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/ONV06Ug
via IFTTT
0 Comments