உலகில் நோபல் பரிசுகள் சான்றாகி தலைமுறை தலைமுறையாய் பாதுகாக்கப்படும் வரலாறாகினும் ,மெய்யான உண்மை என்பது மரணத்திற்கு சான்றாகும் மனித உடல்களும் . மரணத்தினை வென்ற மனித உயிர்களும் . இடையில் மனித நேயமே மனிதம் காக்கும். மனு தர்மம் என்பது மனிதநேய தர்மமாக பரிணாம வளர்ச்சி பெற வேண்டும்.
ஒவ்வொரு தனி மனிதருக்குமான இலக்குகள் வேறு,பாதைகள் வேறு,பயணங்கள் வேறு.
அடிப்படையில் மனிதநேயமும் , அன்புமே முக்கியமான ஒற்றுமை. நோபல் பரிசு வாங்கிட அனைவராலும் முயற்சி செய்திட முடியும் . அது ஒரு இலக்காக அமைத்து வாழ்கை பயணத்தினை தொடங்கலாம்.
இலக்கை அடைவதற்கான பயணமே வாழ்கை. இலக்கை தாண்டி சிந்திக்கவும் செயல்படவும் தொலைநோக்குப்பார்வை கிடைத்திட அந்த பயணம் அவசியமான ஆரம்பம். அந்த பயணத்தில் நமது மனித நேயம் வெளிப்பட்டால் பயணமே சிறப்பானதாக்க அமையும் . நம்மோடு பயணிப்பவர்கள் நமது இலக்கை தாண்டி புதிய இலக்குகளை நமக்கு அமைத்து தருவார்கள்.
ஆகவே அத்தகைய மனிதநேயமுள்ள மனிதராக பயணிக்கும் வாழ்கை பயணத்தினை உறுதி செய்யும் மனிதர்களை மனிதநேயமுள்ள மனிதர்களை உருவாக்கிட எனது இந்த கல்வி பயணம் .
மரணம் தான் இறுதி இலக்கு , என்றாலும் மரணம் தாண்டி வாழ்ந்திட மனிதநேயம் ஒரு வாய்ப்பு என்பதினை கற்றுக்கொடுக்க விரும்பி இந்த சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.
தங்களின் ஆசிகளும் வழிகாட்டுதலும் வேண்டும் . மனிதம் வாழ்க மனிதநேயம் வாழ்க. வாழும்போதும் மறைந்த பின்னும் மனிதநேயம் மட்டுமே மானுடம் வெல்ல மிச்சமிருக்கும் அற்புத விந்தை!
புதிய அதிநவீன தொழில்நுட்ப உலகத்தில் நமது இளைய தலைமுறையினர் ஆகச்சிறந்த மனிதனாக நோபல் பரிசு வாங்காமல் போகலாம் . ஆனாலும் மனித நேயமுள்ள மனிதனாக தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்கும் அன்புள்ளம் கொண்ட மனிதனாக நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வளர்வதே சிறப்பு .
காகிதப்பூக்களின் காலத்தில் உண்மை மலரினையும் மலரின் மணத்தினையும் ,மகரந்தசேர்க்கையின் புனிதத்தினை வளமான வம்சவிருத்தியும், குடும்ப வளம் , ஆரோக்கியமான மனித வளமாக வளர் உருமாற்றம் பெற்றிடவும் முழு மனித வளர்ச்சிக்கும் சக மனிதர்களின் நட்புறவு , அன்பும் மன்னிப்பு , போன்ற மன நலம் கற்றுத்தரும் வழிகாட்டி கல்வி சின்னம். மனித நேயத்தினை சிந்திக்க வாய்ப்புத்தரும் வழிகாட்டி கல்வி சின்னம் .
கணிப்பொறி பாடத்தின் அச்சாணியாக திகழும் ஸிஸ்டெமடிக் முறையினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சமச்சீர் கல்வி சின்னம் KLMN ஸ்வஸ்திக்© ,கணிப்பொறி பாடம் தொடக்கக்கல்வி முதல் மேல்நிலை கல்வி வரையிலான 12 வருட கால கல்வி பயணம், முறையாக வகுப்பறைகளில் கற்றல் கற்பித்தல் நிகழ்வாக முதன்மை பாடமாகும் அந்த நன்னாளில் , தமிழகம் முழுமையாக டிஜிட்டல் தமிழகமாக புதிய உலகம் படைக்கும் .
DR J.KOMALALAKSHMI ,9443044242
COIMBATORE
from கல்வி அமுது https://ift.tt/LU9bxMo
via IFTTT
0 Comments