அதன்படி, பணத்தை எடுப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, வாடிக்கையாளர்களுக்கு செல்போன் அல்லது இ-மெயில் மூலமாக அறிவிப்பு அனுப்ப வேண்டும். அதற்கு வாடிக்கையாளர் அனுமதி வழங்கினால் மட்டுமே, அந்த பரிவர்த்தனையை வங்கிகள் செயல்படுத்த முடியும். இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு வங்கிகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு நிறுவனங்கள் அவகாசம் கோரியிருந்தன. இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம், வாடிக்கையாளரின் அனுமதியின்றி வங்கிகள் இனிமேல் ஆட்டோ டெபிட் செய்ய முடியாது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3AYn34J
via IFTTT
0 Comments